அவர் அளித்த புகாரின்பேரில் மோசடியில் ஈடுபட்ட பொள்ளாச்சியை சேர்ந்த ஹரிபிரசாத் (31), மகேந்திரன் (26), சக்திவேல் (25), ஈரோட்டை சேர்ந்த சரவணமூர்த்தி (23), திருப்பூரை சேர்ந்த அருண்குமார் (24), மற்றொரு சக்திவேல் (29), ஜெயபாரதி (22), மகேந்திரன் (30), கோகுல் (31) ஆகியோரை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இந்த கும்பல் மும்பை, பெங்களூர், கோவா உள்ளிட்ட பகுதியில் தங்கி மோசடியில் ஈடுபட்டதும், இதற்காக புதிதாக சிம்கார்டுகள் வாங்கி, புதிய வங்கி கணக்கு துவக்கி பணம் பெற்றதும் தெரியவந்தது.
இதேபோல், துபாய் சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி திருப்பூரில் உள்ள 19 வயது இளம்பெண்களை தோழி ஒருவர் சினிமா நடன கலைஞர்கள் துபாய்க்கு அனுப்பி உள்ளார். துபாய் சென்ற இளம்பெண்களை அங்குள்ள நடனவிடுதியில் நடமாடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். அது அந்த இளம்பெண்களுக்கு பிடிக்காததால் இது குறித்து திருப்பூரில் உள்ள தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்கள் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து துபாயில் சிக்கி தவித்த இளம்பெண்களை மீட்டு, துபாய்க்கு அனுப்பிய 20 வயது தோழி மற்றும் சென்னையை சேர்ந்த சினிமா நடன கலைஞர்களான நித்தி (22), மோகன் (31), நவீன் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.