விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 21ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. அதில் 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகர சுவாமி திரிபுர சுந்தரி எழுந்தருளி 4 மாட வீதிகளில் உலா வருகின்றனர். தொடர்ந்து 23ம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கல்யாண சுந்தரர்சுவாமி திருக்கல்யாண உற்சவமும், பிற்பகல் 2 மணியளவில் 63 நாயன்மார்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாடவீதி உற்சவமும் நடைபெறும்.
தொடர்ந்து இரவு 9 மணியளவில் மகிழடி சேவை உற்சவம் நடைபெறுகிறது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் இணை கமிஷனர் ஹரிகரன், உதவி கமிஷனர் சுப்பிரமணியம் மற்றும் ஊழியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.