‘ஈரான் சிங்கம்’ என்றழைக்கப்படும் இவர் முன்னாள் சர்வதேச கபடி வீரர் மட்டுமல்ல, மல்யுத்த வீரராகவும் இருந்தவர். புரோ கபடியில் முதல் வெளிநாட்டு பயிற்சியாளரான மசந்தரானி ஏற்கனவே 6வது சீசனில் யு மும்பா பயிற்சியாளராக இருந்தார். இடையில் தெலுகு டைடன்ஸ் அணிக்கு மாறினார். மீண்டும் யு மும்பா பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள மசந்தரானி, முன்னாள் சர்வதேச வீரரான ஜீவாகுமாருடன் இணைந்துள்ளார். அதனால் யு மும்பா வெற்றிகளை குவித்து வருகிறது. முக்கியமாக இந்த இருவரும், தமிழகத்தைச் சேர்ந்த வி.விஸ்வநாத், எம்.கோகுலகண்ணன் ஆகியோருக்கு உரிய வாய்ப்பளித்து ஜொலிக்க உதவி வருவது குறிப்பிடத்தக்கது.