மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் நியமனம்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி(72) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 12ம் தேதி காலமானார். இதையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் நேற்று நியமிக்கப்பட்டார். டெல்லியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற உள்ளது. அது வரை இடைக்கால ஏற்பாடாக கட்சியின் பொலிட்பீரோ, மத்திய குழுவின் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் பதவி வகிப்பார் என்று அக்கட்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் 10,000 அதிநவீன இலவச கழிவறைகள்: பராமரிப்பு சரியில்லை எனில் புகார் அளிக்கலாம்

2023 நவம்பர் மாதம் முதல் கடந்த 15ம் தேதி வரை ரூ.10.87 கோடி போதைப்பொருள் பறிமுதல்: அமைச்சர் தகவல்

முழு எழுத்தறிவு பெற்ற கிராம பஞ்சாயத்துகளை உருவாக்க நடவடிக்கை: கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு