ஆனால், இவர்களுக்கு குழந்தை பிறக்காததால் அவரது சம்மதத்துடன் அப்பலம்மா என்பவரை, பாண்டண்ணா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2007ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கணவர் பாண்டண்ணா 2வது குழந்தை வேணும் என்று கேட்டதால் மனைவிகள் இருவரும் தாங்களாகவே முன்வந்து அவருக்கு மூன்றாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி அதே ஊரை சேர்ந்த லாவ்யா என்ற இளம் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து இரண்டு மனைவிகள் புகைப்படத்துடன் வாழ்த்து பேனர் வைத்து, பத்திரிக்கை அச்சடித்து கணவருக்கு 3வது திருமணம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.