எனது கணவரிடம் இருந்து விவாகரத்துக்கு முன், எனது பெயரை மாற்ற விரும்புகிறேன். ஒன்றிய அரசின் விதிமுறைகள் பாரபட்சமானது; தன்னிச்சையானது. மேலும் இந்திய அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 பிரிவுகளின் கீழ் அடிப்படை உரிமைகளை மீறுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இம்மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒன்றிய அரசின் பதிலை உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 7ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் டோகன் சாஹு பதிலளிக்கையில், ‘ஒருவரின் பெயரை மாற்றுவது என்பது அவரது அடையாளத்தையும் மாற்றக் கூடியது. அத்தகைய சூழ்நிலையில், பெயரை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டியது அவசியம். திருமணமான பெண் ஒருவர், தனது குடும்பப் பெயரை மாற்ற விரும்பினால், அவர் தனது கணவரிடம் முறையான அனுமதி (தடையில்லா சான்று) பெற வேண்டும். சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க இந்த நடைமுறை அவசியமாகிறது’ என்று கூறினார்.