6 மாதங்களுக்கு முன் திருமணமானவர் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

வடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசேகரன் (31). மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான் வீதியில் வீரசேகரன் மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். 10 நாட்களுக்கு முன்பு மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் பணிமுடிந்து திரும்பிய வீரசேகரன் படுத்து தூங்கினார். நேற்று காலை 7 மணி அளவில் அவரது பெற்றோர் வந்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் வீரசேகரன் பிணமாக தொங்குவதைப் பார்த்து கதறினர். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, அவரது தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்னையா, பணிச்சுமையா என விசாரிக்கின்றனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்