அதன்பேரில், ஆலந்தூர் மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், மண்டல செயற்பொறியாளர் பாண்டியன், உதவி செயற்பொறியாளர் மணிமாறன் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வசித்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு, நீதிமன்ற உத்தரவால் இந்த பணி நடைபெறுவதாக தெரிவித்தனர். இங்குள்ள ஒரு வீட்டை இடிக்க முயன்றபோது, அந்த வீட்டின் உரிமையாளர் வெளியே வர மறுத்து, ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்றது. வீடுகளை இழந்தவர்கள் தற்காலிகமாக அங்குள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.