இதற்கிடையில் வெங்கடேசனுக்கு மற்றொரு இளம் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்பெண்ணை வெங்கடேசன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக காதலித்து தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட வெங்கடேசன் மீது கொடிவலசா காலனியைச் சேர்ந்த இளம் பெண் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெங்கடேசன் மீது அவர் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் மலர் விசாரணை நடத்தினார். இதில் இளம்பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்யாமல் வெங்கடேசன் ஏமாற்றியது உறுதியானதையடுத்து, அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.