டெல்லி: நீட் வினாத்தாள் கசிந்தது என்பது நடந்த ஒன்று. 67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்ற விவகாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு என்பது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. வாட்ஸ் அப், டெலிகிராமில் வினாத்தாள் கசிந்திருந்தால் காட்டுத்தி போல பரவி இருக்கும் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.