சந்தை மதிப்பு சீரமைத்தல் தொடர்பான வரைவு வழிகாட்டி பதிவேடு அரசு அலுவலகங்களில் வைப்பு: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47 ஏஏ – ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, 4 (2)ன்படி மைய மதிப்பீட்டு குழு கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி நிர்ணயம் செய்தது. இந்த குழு நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின் அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்திடலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Related posts

மதுரை அருகே முதியவர் கொலை வழக்கில் 5 பேர் கைது!!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீட்டிப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்

சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பா.ஜ.க-வினர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு