சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மெல்ல மெல்ல சீரடைகிறது. காமராஜர் சாலை முழுவதும் மக்கள் கூட்டம் திரண்டிருந்த நிலையில், தற்போது நேப்பியர் பாலம், உழைப்பாளர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சீராகி மாநகர பேருந்து போக்குவரத்தும் தொடங்கியது. விமானசாகச நிகழ்ச்சி முடிந்து 3 மணி நேரமாக கூட்டத்தால் திணறிய மெரினா கடற்கரை சாலை இயல்பு நிலைக்கு திரும்புகிறது.