சென்னை : மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது என தமிழக அரசுக்கு தலைமை ஏர் மார்ஷல் நன்றி தெரிவித்துள்ளார். தாம்பரத்தில் நடந்த விமானப் படை 92ம் ஆண்டு நிறைவு விழாவில் தலைமைத் தளபதி ஏ.பி.சிங் உரையாற்றினார். அப்போது எல்லைகளை பாதுகாப்பது மட்டுமின்றி பேரிடர் மீட்புப் பயணிகளிலும் விமானப் படை ஈடுபடுகிறது என்று தெரிவித்தார்.