இதை பார்த்த பொதுமக்கள் உதவி கேட்டு அலறினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மெரினா மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பு சாதனங்களுடன் கடலில் இறங்கி சிறிது தொலைவு நீந்தி சென்று 2 சிறுவர்களை மீட்டனர். இருவரும் தண்ணீர் அதிகளவில் குடித்து இருந்ததால், உடனே முதல் உதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவர்கள் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பேசின் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் என்றும், இவர்கள் பள்ளிக்கு செல்லாமல் மெரினா கடற்கரைக்கு வந்து குளித்தது தெரியவந்ததுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் 2 சிறுவர்களையும் விரைந்து செயல்பட்டு உயிருடன் மீட்ட மெரினா மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.