கார் மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி அருகே வரும் போது, சாலையின் நடுவே ஒருவர் அமர்ந்து இருந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத டிரைவர் வீரமணி, காரின் வேகத்தின் காரணமாக சாலையின் நடுவே அமர்ந்து இருந்த நபர் மீது மோதினார். இதில் அந்த நபர் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நேரில் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் டிரைவர் வீரமணியை கைது செய்தனர். மேலும் சாலையின் நடுவே இறந்த நபர் அமர்ந்து இருந்ததால், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரா என்றும், அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.