மெரினா ராணி மேரி கல்லூரி முன்பு சாலையின் நடுவே அமர்ந்து இருந்தவர் கார் மோதி பலி

சென்னை: மெரினா ராணி மேரி கல்லூரி முன்பு சாலையின் இடையே அமர்ந்து இருந்தவர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி(36). இவர் ெசன்னையில் கால் டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் இருந்து 4 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவொற்றியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கார் மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி அருகே வரும் போது, சாலையின் நடுவே ஒருவர் அமர்ந்து இருந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத டிரைவர் வீரமணி, காரின் வேகத்தின் காரணமாக சாலையின் நடுவே அமர்ந்து இருந்த நபர் மீது மோதினார். இதில் அந்த நபர் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நேரில் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் டிரைவர் வீரமணியை கைது செய்தனர். மேலும் சாலையின் நடுவே இறந்த நபர் அமர்ந்து இருந்ததால், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரா என்றும், அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!