சென்னை: மெரினா கடற்கரை லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள் முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள 360 மீன் கடைகளில் 357 கடைகள் ஒதுக்கீடு திங்கள் முதல் தொடங்கப்படும். லூப் சாலையின் இரு புறமும் மீன் வியாபாரம் நடப்பதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு என ஐகோர்ட் தாமாக வழக்கு தொடர்ந்தது. பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது; விடுபட்டோருக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.