இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத்தேர்தலை தொடர்ந்து நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் பாகிஸ்தான் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், அதிபர் தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகராக முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த தலைவர் சர்தார் அயாஸ் சாதிக் தேர்வானார்.