Sunday, September 8, 2024
Home » வரும் மார்ச் 12ம் தேதி திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம்: தலைமைக் கழகம் அறிவிப்பு

வரும் மார்ச் 12ம் தேதி திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம்: தலைமைக் கழகம் அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: சென்னை தியாகராய நகரில் வரும் மார்ச் 12ம் தேதி திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிட வேண்டிய நெறிமுறைகளை வகுத்திடும் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் வருகிற மார்ச் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை, தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஓட்டல் அகார்டில் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் – மாநிலங்களவைக்குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. தலைமையில், கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி. வரவேற்புரையாற்றிட, இளைஞர் அணிச் செயலாளர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிட இருக்கின்றார். அழைப்பிதழ் வரப் பெற்றவர்கள் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

You may also like

Leave a Comment

3 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi