தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே வட்டி வசூல் செய்ய சென்ற இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாப்பாநாட்டில் வட்டி வசூல்செய்ய சென்ற செந்தில்குமார் என்பவர், கடன் வாங்கியவரின் மனைவிக்கு தொந்தரவு தந்ததாக புகார் அளிக்கப்பட்டது. வட்டிக்கு பணம் வாங்கியவரின் மனைவி அளித்த புகாரின்பேரில் செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.