அங்கு வாண்டோலி கிராமத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருந்த பகுதியை போலீஸ் படை சுற்றி வளைத்தது. போலீஸ் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸ் படையினர் மாவோயிஸ்ட்டுகள் இருந்த இடத்தின் அருகே சென்றபோது, அவர்கள் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் போலீசாரும் மாவோயிஸ்டுகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. நேற்று மதியம் துவங்கிய சண்டை, மாலை வரை நீடித்தது. சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. போலீசாரின் என்கவுன்டரில் 12 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.