தற்போது அதில், 134 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு வகைகளில் உயர் கல்வி துறை பேராசிரியர்கள் இடையூறுகளை அளித்து வருகின்றனர். தனியார் நிறுவனங்களில் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு ஆசிரியர் வேலையை வழங்குவது மிகவும் கொடுமையாக உள்ளது. ஓராண்டுக்கு மேலாக என்று காலி பணியிடங்களை நிரப்ப போராடி வருகிறோம். எப்படியும் பச்சையப்பன் கல்லூரியில் இருக்கும் இந்த 132 பணியிடங்களை தேர்வு செய்த பின்னரும், இந்த அதிகாரிகள் அங்கீகரிக்கப் போவதில்லை. நாங்கள் வழக்காடு மன்றத்தில் போராடி அவர்களுக்கு வேலைகளை நேர்மையாக வாங்கித் தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.