மானூர் அருகே பைக் மீது ஆட்டோ மோதி 8 வயது சிறுமி பரிதாப பலி

மானூர் : மானூர் அருகேயுள்ள தெற்குபட்டியைச் சேர்ந்தவர் முகமது மைதீன் (34). ஓட்டல் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகள் நஸ்ரின் பாத்திமா(8) என்பவரை தனதுபைக்கில் புறப்பட்டு மானூர் வந்தார். பின்னர் தெற்குபட்டிக்கு சென்றபோது எதிரே குப்பனாபுரத்தைச் சேர்ந்த அன்னாவிமுத்துவின் மகன் முகேஸ்குமார் (24) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, இவரது பைக்கில் மோதியது. இதில் பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டதில் சிறுமி நஸ்ரின் பாத்திமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் இந்த விபத்தில் முகமது மைதீன் படுகாயம் அடைந்தார். தகவலறிந்து வந்த மானூர் போலீசார், அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்தில் பலியான சிறுமியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அத்துடன் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு