மும்பை: மனுதர்ம சாஸ்திரத்துக்கு மராட்டியத்தில் இடமில்லை.. மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை என மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார். இது அம்பேத்கர், பூலே போன்றோர் பிறந்த பூமி. இவர்களின் முற்போக்கு சிந்தனைகளை செயல்படுத்துவதில் பெயர் பெற்ற மாநிலம் மகாராஷ்டிரா என மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அஜித் பவார் விளக்கமளித்துள்ளார்.