குன்றத்தூர் அருகே பூட்டிய காருக்குள் ஆண் சடலம்: கொலையா தற்கொலையா என விசாரணை

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே பூட்டிய காருக்குள் ஆண் சடலம் மீட்கப்பட்டதையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் நேற்று வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையில், வட மாநில வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், காரை உடைத்து இறந்து கிடந்த அந்த வாலிபர் உடலை மீட்டு, அதனை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்து கிடந்தவர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் போல் இருப்பதால் அவர் யார்? எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? எதற்காக இந்த பகுதிக்கு வந்தார்? பூட்டிய காருக்குள் பிணமாக இருந்ததால் காரை யாரேனும் திருட வந்தபோது அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு காருக்குள் வைக்கப்பட்டாரா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய காருக்குள் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வங்கதேசத்திற்கு எதிரான தொடர்; இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார்?.. குழப்பத்தில் ரசிகர்கள்

செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல்