Tuesday, July 2, 2024
Home » தொழில்முனைவோருக்காக பால் பண்ணை தொழில் வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

தொழில்முனைவோருக்காக பால் பண்ணை தொழில் வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

by Mahaprabhu

பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

* பசுந்தீவன பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1 கோடியில் பசுந்தீவன புல் கரணைகள் வழங்கப்படும்.

* பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் இதர நிதியுதவிகள் உயர்த்தி வழங்கப்படும்.

* கால்நடை மருத்துவர்கள், விரிவாக்க அலுவலர்கள், கிராம நல ஊழியர்கள் போன்ற 3000 பணியாளர்களுக்கு பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சிகள் வழங்கப்படும்.

* கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கரூர் ஒன்றியங்களில் ரூ.2.34 கோடி மதிப்பீட்டில் ஆய்வுக்கூடங்கள் நிறுவப்படும். 23 ஒன்றிய மற்றும் அனைத்து இணைய பால் பண்ணைகளின் ஆய்வுக் கூடங்கள் ரூ.9.31 கோடியில் மேம்படுத்தப்படும்.

* 150 தொகுப்பு பால் குளிரூட்டும் மையங்களில் முதற்கட்டமாக ரூ.6.50 கோடியில் பால் பகுப்பாய்வு (கலப்படம்) கருவிகள் நிறுவப்படும்.

* பால் கொள்முதல், பாலின் தரம் மற்றும் பால் விநியோகம் ஆகியவற்றிற்கு உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்குவதற்கு ஏதுவாக 500 தொகுப்பு பால் குளிரூட்டும் மையங்களில் மென்பொருள் நிறுவப்பட்டு பால் கொள்முதல் செயல்பாடுகள் Cloud Based Connectivity மூலம் கண்காணிக்கப்படும்.

* சிவகங்கை ஒன்றியத்தின் தற்போதுள்ள பால்பாக்கெட் குளிர்பதன அறையின் கையாளும் திறன் 20,000 லிட்டரிலிருந்து 1,00,000 லிட்டராக உயர்த்தப்படும்.

* மாவட்ட ஒன்றிய மற்றும் சென்னை மாநகர பால்பண்ணைகளுக்கு ISO 22000 சான்றிதழ் பெறப்படும். புதிதாக பால் பண்ணை தொழில் துவங்க விரும்பும் தொழில் முனைவோருக்காக 2 பால் பண்ணை தொழில் வளர்ச்சி மையம் அமைக்கப்படும்.

You may also like

Leave a Comment

12 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi