மன்னார்குடியில் தமிழ்ச்சங்க 4ம் ஆண்டு துவக்க விழா

 

மன்னார்குடி, நவ. 15: மன்னை தமிழ்ச் சங்கத்தின் 4ம் ஆண்டு துவக்க விழா, புத்தக வெளியீட்டு விழா மற்றும் பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா சங்க தலைவர் விஜயச்சந்திரன் தலைமையில் மன்னார்குடியில் நடந்தது. விழாவில், அறியப்படாத 100 சாதனையாளர்கள் குறித்து 100 எழுத்தாளர்கள் எழுதிய நூறு ஆய்வு கட்டுரை களின் தொகுப்பு நூலான சிகரம் தொட்ட சிந் தனையாளர்கள் என்ற நூலினை பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜா வெளியிட டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கவியரங்கம் நடந்தது. தமிழ்ச்சங்க தொடக்க விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டி யில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். முன்னதாக ஒருங்கிணைப் பாளர் கண்ணகி வரவேற்றார் முனைவர் அன்பரசு நன்றி கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை