ஊத்துக்கோட்டையில் மண்ணடி மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா

ஊத்துக்கோட்டை: மண்ணடி மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா நடந்தது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கிராம தேவதை மண்ணடி மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா கடந்த 30ம்தேதி தொடங்கியது. அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் வரை செல்லியம்மன் கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல்வைத்து வழிப்பட்டனர். முன்னதாக செல்லியம்மனுக்கு அபிஷேககமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அன்று மாலை அங்காளம்மன் மற்றும் எல்லையம்மன் கோயிலிலும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் தொடர்ந்து 3 நாட்கள் கரக ஊர்வலம் நடைபெற்றது 4வது நாள் இரவு உற்சவரான மாரியம்மன் ரெட்டி தெரு, செட்டித்தெரு, கலைஞர் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக காப்புகட்டிய பக்தர்கள் மாரியம்மன் திருவுருவத்தை இரவு முழுவதும் பல்லக்கில் தூக்கிக்கொண்டு திருவீதியுலா சென்றனர்.

அப்போது பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் 5ம் நாளான நேற்று மண்ணடியில் அம்மன் இறக்கி வைக்கப்பட்டது. மாலை 7 மணிக்கு சிறுவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் வேப்பிலை ஆடை அணிந்து அம்மனை வலம் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக ரெட்டித்தெரு, செட்டி தெரு பகுதியில் இருந்து பெண்கள் ஊர்வலமாக தாங்கள் கொண்டு வந்த கும்பசாதத்தை மாரியம்மன் கோயில் முன்பு வைத்தனர். மலைபோல் குவிக்கப்பட்ட கும்பசாதத்தை அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். பிறகு அந்த கும்பசாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Related posts

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்

திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு