புதுடெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’(மன் கி பாத்) என்ற பெயரில் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சி குறித்து ரோத்தக்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) நேயர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் குறித்து பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி கவுரவ் திவேதி, இயக்குநர் தீரஜ்.பி.சர்மா ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில்,‘‘நூறு கோடி மக்களை மனதின் குரல் நிகழ்ச்சி சென்றடைந்து உள்ளது. ஏதாவது ஒரு அத்தியாயத்தையாவது அவர்கள் கேட்டு ரசித்துள்ளனர். 23 கோடி மக்கள், மனதின் குரல் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக கேட்டு ரசித்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது’’ என்றனர்.