அவர் அளித்த மனுவில் , புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதனால் புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி தராததால் கோவில் திருவிழாகள் நடத்தப்படாமல் உள்ளது என மனுதாரர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளை தலைமை நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.