மஞ்சுவிரட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரிய மனு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க மதுரைக்கிளை உத்தரவு

புதுக்கோட்டை: மஞ்சுவிரட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி தரக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்த மலையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவர் அளித்த மனுவில் , புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதனால் புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி தராததால் கோவில் திருவிழாகள் நடத்தப்படாமல் உள்ளது என மனுதாரர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளை தலைமை நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

 

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை