அப்போது மாஞ்சோலை தொடர்பான முழு விவரங்கள், அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள், தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு எடுத்துள்ள மறுவாழ்வு நடவடிக்கைகள், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆணையத்திடம் மாஞ்சோலை தொடர்பான முக்கிய ஆவணங்கள் அடங்கிய 1,125 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மனித உரிமை ஆணையக் குழுவினர் மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தினர். இன்று முதல் 3 நாட்கள் தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வரும் பிபிடிசி நிர்வாகம், தொழிற்சாலை, தேயிலை தோட்டம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து பொதுமக்களிடம் மனுக்களும் பெறுகின்றனர்.