டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருச்சி சிவா கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசாதது குறித்து ஜனாதிபதியிடம் முறையிட்டோம். இந்தியா கூட்டணி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார் என்று திமுக எம்.பி திருச்சி சிவா கூறியுள்ளார்.