மணிப்பூரில் குக்கி இனப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுக மகளிர் அணியினர் பங்கேற்றனர். மணிப்பூரில் நிகழ்ந்து வரும் இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.