டெல்லி: மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடரவுள்ளது. வெளிப்படையான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு வழக்கை விசாரிக்கிறது.