டெல்லி: மணிப்பூரில் இணையதள சேவை துண்டிப்பு குறித்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. மணிப்பூரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதை திரும்பப் பெறக்கோரி ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. மணிப்பூர் ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கு விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்ய மாநிலஅரசுக்கு உத்தரவிட்டு வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.