மணிப்பூரில் தீவிரவாதிகள் சுட்டதில் சிஆர்பிஎப் வீரர் பலி

இம்பால்: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜிரிபாம் மாவட்டம் மோங்பாங் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த குக்கி தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுத குழுவினர் பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் மத்திய பாதுகாப்பு படை வீரர் (சிஆர்பிஎப்) ஒருவர் பலியானார். இன்னொரு வீரர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

மண்டபம் கேம்ப் பகுதியில் முள்புதர்கள் மண்டிய மின்வாரிய அலுவலகம்

சாயல்குடி அருகே வடமாடு மஞ்சு விரட்டில் வீரர்கள் 5 பேர் காயம்

மயிலாடுதுறை விவசாய சங்கத் தலைவர் மீது வழக்கு..!!