இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இரு குழுக்களும் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் படைகள் மாவட்டத்திற்கு விரைந்துள்ளன. மணிப்பூரின் தவ்பால் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு வாலிபர்கள் திங்களன்று இரவு விடுவிக்கப்படுவார்கள் என்று மாநில அரசு உறுதியளித்திருந்தது. ஆனால் வாலிபர்கள் தீவிரவாதிகளிடம் இருந்து இன்னும் மீட்கப்படவில்லை. இதை கண்டித்து இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்னுபூர், காங்சிங் மற்றும் தவ்பால் மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முழு அடைப்பு போராட்டமும் நடந்தது. இதனால் 5 மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.