மணிப்பூர் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

இம்பால்: மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் காவல்துறை தலைமையகத்தில் நேற்று முன்தினம் இரவு நுழைய முயன்ற கும்பலை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது கும்பல் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் கும்பல் வீரர்கள் மீது கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இதனிடையே காங்போக்பி மாவட்டத்தில் தீவிரவாதிகள் என சந்தேகப்படும் கும்பலானது அருகில் உள்ள மலை பகுதிகளில் இருந்து தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு கிராமத்தில் இருக்கும் தன்னார்வலர்கள் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பு மோதலில் கிராம தன்னார்வலரான மனோரஞ்சன் என்பவர் கொல்லப்பட்டார்.

Related posts

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

2060-ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐநா

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு