எனினும் அவ்வப்போது அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. இதனிடையே கலவரத்தை கட்டுப்படுத்த மணிப்பூரில் இணையதள சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வப்போது இந்த தடை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தற்போது இணையதள சேவைக்கான தடை மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 மாவட்டங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதல் காவல் துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.