மணிப்பூரில் துப்பாக்கி, கையெறி குண்டுகள் பறிமுதல்

இம்பால்: மணிப்பூரில் இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைதியின்மை நிலவி வருகின்றது. இந்நிலையில் பிஷ்னுபூர் மாவட்டத்தின் மச்சின் மனோ மலைப்பகுதியில் போலீசார் தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். துப்பாக்கிகள், ராக்கெட் மூலமாக இயக்கப்படும் கையெறி குண்டுகள் மற்றும் வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு