மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தீப்பந்தம் ஏந்தி காந்தி சிலைக்கு மனு கொடுத்து போராட்டம்!!

மணிப்பூர் : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பழங்குடியின பெண் இருவர் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் , குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இச்சம்பவத்திற்கு காரணமாக மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள காந்தி சிலை முன் அனைத்திந்திய மாதர் சம்மேளனத்தினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தி காந்தி சிலையிடம் மனு அளித்தும் தங்களது எதிர்ப்பை தெரியப்படுத்தினர்.

Related posts

எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல உதவும் : மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல்

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம்..!!