இந்நிலையில் நேற்றும் வன்முறை சம்பவம் அரங்கேறி உள்ளது. மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை உச்சியில் இருந்து குட்ரூக், கடங்பந் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை எறிந்தும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் நங்பாம் சுர்பலா தேவி(31) என்ற பெண் பலியானார். அவரது 8 வயது மகள், காவல்துறை அதிகாரி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.