இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் தெங்நோபால் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடை டிஎஸ்பி ஆனந்த் தலைமையிலான போலீஸ் குழு ஆய்வு செய்ய வந்தது. அப்போது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் டிஸ்எஸ்பி ஆனந்த் உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறப்பு கமாண்டோ பிரிவினர் மோரே கல்லூரி அருகே வீரர்கள் வாகனத்தின் மீது மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.