மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சென்னையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சென்னையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கையில் பாதைகளை ஏந்தியபடி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரத்தை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் வெடித்து வருகிறது. அதில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்கா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்றிய பாஜக ஆட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தடுக்க தவறிவிட்டதாகவும், ஆளுங்கட்சியாக உள்ள மாநில பாஜக அரசை உடனடியாக கலைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்