அவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது கும்பலில் இருந்த போலீஸ் உடை அணிந்த சிலர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த சம்பவங்களில் ராணுவ மேஜர் உட்பட 50 பேர் காயமடைந்தனர். இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தலையில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37வயது நபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.