மணிப்பூரில் ஆயுதம், வெடிமருந்து பறிமுதல்

இம்பால்: மணிப்பூர் மாநிலம், தவுபால் மாவட்டத்தில் உள்ள டெக்சாம் மேனிங் சிங் பகுதியில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் மணிப்பூர் போலீசார் இணைந்து நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, துப்பாக்கிகள், தோட்டாக்கள்,வெடிகுண்டுகள், எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுராசந்திரப்பூர் மாவட்டத்தில் ராணுவம்,பிஎஸ்எப் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில், கையெறி குண்டுகள்,துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

கொத்தக்குப்பத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை!

பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் தென்னையில் வேர் அழுகல் நோய் தடுப்பு பணி ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் பழுதாகி உள்ள 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்ற மின்வாரியம் முடிவு