மணிப்பூர் போராட்டம்: 5 மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிப்பு

மணிப்பூர்: மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட கோரி மாணவர்கள் போராட்டத்தை அடுத்து 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அரசு தடை விடுத்துள்ளது. தவ்பால் மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டவிதி 163 (2)ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால், ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு தளர்வு ரத்து என அறிவிக்கப்பட்டது. மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது.

Related posts

சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஒட்டுநர் கைது

வேப்பந்தட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மும்பை நடிகை கைது செய்து கொடுமைபடுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்