இம்பால்: மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி ஏற்பட்ட வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். தற்போது அங்கு மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தாலும் அவ்வப்போது வன்முறை அரங்கேறி வருகின்றன. மேற்கு இம்பால் மாவட்டம கடங்பந்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கிராம பாதுகாவலர் ஜேம்ம்பாண்ட் நிங்கோம்பம் என்பவர் பலியானார். அதே போல் மோர்க் பகுதியில் போலீசார் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு காமாண்டோ வீரர் படுகாயம் அடைந்தார். வாகனம் மீது 2 குண்டுகள் வீசப்பட்டன. 400 ரவுண்ட் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 2 வீடுகள் எரிக்கப்பட்டன.