மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா கோலாகலம்

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அணைக்கரை கோட்டாலம் பகுதியில் உள்ள மணிமுக்தா அணையில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

மீன்பிடி திருவிழாவில் அணைக்கு அருகாமையில் உள்ள கள்ளக்குறிச்சி, அகரக்கோட்டாலம், அணைக்கரை கோட்டாலம், வாணியந்தல், பெருவங்கூர், சிறுவங்கூர், பள்ளிப்பட்டு மற்றும் சூளாங்குறிச்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் மீன் பிடித்து சென்றனர்.

இதில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு வலை விரித்தும், கூடை வைத்தும் மீன்களை பிடித்து சென்றனர். அவர்கள் வலையில் கெண்டை மீன், இறால் மீன், விரால் போன்ற மீன்களை ஏராளமாக பிடித்து பாலித்தீன் சாக்கு மூட்டைகளில் தூக்கிச் சென்றனர்.

Related posts

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே