‘‘புஸ்வாணமா போன வாக்கு சிதறடிப்பு திட்டம் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில இந்தியா கூட்டணிக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தி வாக்குகளை சிதறடிக்க பொதுநல அமைப்புகள் சிலவற்றை மதவாத அமைப்புகள் திரைமறைவில் இயக்கியிருக்காங்க… இதுதொடர்பா ஆலோசனை கூட்டங்களையும் புதுச்சேரி, காரைக்காலிலும் ஏற்பாடு செய்து மாஸ் காட்டினாங்களாம்… ஆனால் மதசார்பற்ற நிலைப்பாட்டில் சில இயக்கங்கள் உறுதியா இருந்ததோடு, மாற்று முடிவெடுத்தால் ஒருங்கிணைப்பில் இருந்து பிரிந்து விடுவோம்னு தடாலடியாக மிரட்டல் விடுக்கவே அத்திட்டம் புஸ்வானமாகிப் போச்சாம்..
எதை முன்னிறுத்தி பொது வேட்பாளர் திட்டத்தை மதவாதிகள் முன்னெடுத்தார்களோ அது தோல்வியில முடியவே ரொம்பவே ஏமாற்றத்துல இருக்காங்களாம்.. அதோடு இந்தியா கூட்டணியில் போட்டியிடும் காங்கிரசுக்கு, ஏற்கனவே திமுகவின் ஆதரவு உள்ளதால எதிரியையும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளி விட்டுள்ளதை எண்ணி வேதனையில புலம்புறாங்களாம் மதவாத அமைப்புகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இனிமே தான் உண்மையாவே முதுகுல குத்தப்போறதா மாஜி மந்திரி பத்தவெச்ச கதைய சொல்லுங்களேன்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மக்களவை தொகுதியில முக்கிய கட்சிகளோட வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செஞ்சிட்டாங்க.. அதுக்கு முன்னாடியே வேட்பாளர்களோட அறிமுக கூட்டமும் நடத்தி முடிச்சிட்டாங்க.. இந்நிலையில இலை பார்ட்டி மாஜி வீரமான மந்திரிக்கும், மலர் பார்ட்டி கூட்டணி வேட்பாளருக்கும் வார்த்தை போர் வெயிலைவிட அதிகமா அனல் பறக்குதாம்.. வெயிலூர்ல நடந்த கூட்டத்துல, மாஜி மந்திரி வீரமானவரு, கடந்த முறை நம்மோட சேர்த்து களம் கண்டவரு, இன்னைக்கு எதிர்த்து போட்டியிடுறாரு..
அவர் இலை பார்ட்டி துரோகம் செஞ்சிட்டாங்க.. அதனால் நான் தோல்வியடைஞ்ேசன், நாம் தான் முதுகுல குத்திடோம்னு பேசுறாரு.. இனிமே தான் அவரை உண்மையாவே முதுகுல குத்தப்போறோம்னு சொல்லி பத்தவெச்சிருக்காரு.. அதுக்கு பதில் சொன்ன மலர் கட்சி கூட்டணி வேட்பாளர், போன தேர்தல்ல அதிமுக காரங்களெல்லாம் ஓடியாடி உழைச்சாங்க.. ஆனா ஒரே ஒருத்தரு மட்டும் எந்த போன்ல, எங்க ேபசினாரு, என்ன பேசினாருன்னு எல்லா எவிடென்ஸ்சும் இருக்குது.. 1 கே ஓட்டு கொடுத்து மாஜி தான் முதுகுல குத்திட்டாரு..
நான் அமைச்சர் ஆகிவிடுவேன்னு பழிவாங்கப்பட்டேன். அது அவரால் தான்னு கூறினாராம்.. இந்த வார்த்தை மோதல் சூட்டை கிளப்ப, மாஜி மந்திரி அச்சத்துல உறைந்து போயிருக்குறாராம்.. எவிடென்ஸ் வெளியிடுவேன்னு சொல்றாரே, உண்மையாவே ஆதாரம் இருக்குதா.. இல்ல பெயரளவுக்கு சொல்லி வர்றாரான்னு இலை பார்ட்டிங்க பரபரப்பாக பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எம்ஜிஆர் படத்தை போட்டு பிரசாரம் செய்யப்போறதா சொல்லி இலைக்கட்சி தலைவர்கள் வயிற்றில் புளிய கரைத்தது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தேர்தல் பிரசாரத்திற்கு எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவோம்னு அல்வா தொகுதியின் தேசிய கட்சி வேட்பாளர் பரபரப்பை கூட்டியிருக்கிறார்.. இந்த அறிவிப்பு இலைக்கட்சியினருக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கு.. அதாவது, அல்வா தொகுதியின் வேட்பாளர் முதலில் இலைக்கட்சியில் அமைச்சராக இருந்தவர். மம்மி மறைவுக்கு பிறகு இலைக்கட்சியை கை கழுவி விட்டு தேசிய கட்சியில் இணைந்தவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் இலைக்கட்சி கூட்டணியுடன் அல்வா தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றார்.
தற்போது தேசிய கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் அவர்தான். என்றாலும், அவருக்கு டெல்லி ஆசை தொற்றிக் கொண்டதால், இந்த முறை மக்களவை தேர்தலிலும் போட்டி போடுகிறாரு.. கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, நான் தற்போது தேசிய கட்சியில் இருந்தாலும் எனக்கு அரசியல் அறிமுகம் கொடுத்தது எம்ஜிஆரும், மம்மியும் தான். வாழ்வு கொடுத்த தலைவர்களை மறப்பது அரசியல் நாகரிகம் இல்லை. எனவே நான் எம்ஜிஆர் படத்தை போட்டு பிரசாரம் செய்வேன்னு சொல்லி இலைக்கட்சி தலைவர்களை உசுப்பேற்றியுள்ளார்.
அவரது இந்த அறிவிப்பு இலைக்கட்சியினர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.. எங்கே பழைய கூட்டணி ஆசையில் ஓட்டை அவருக்கு மாற்றி போட்டு விட்டால், நமது நிலைமை என்ன ஆவது, பின்னுக்கு தள்ளப்படுவோமான்னு இலைக்கட்சியினர் அச்சத்தில் உறைந்து போயிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலத்து கனி கட்சி தலைவர் பிரசாரத்திற்கு செல்லாமல் இருப்பதால் வேட்பாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாமே…’’
‘மதில்மேல் பூனையா இருந்த சேலத்து கனி கட்சி தேசியக் கட்சியான தாமரையுடன் திடீரென கூட்டணி சேர்ந்து 10 தொகுதியில் போட்டியிடுகிறது.. ஆரம்பத்திலிருந்தே தாமரை கட்சியுடன் கூட்டணி சேர கடும் எதிர்ப்புகள் எழுந்ததாம்.. சேலத்து கனி கட்சி தலைவரின் கழுத்துக்கு வந்த கத்தியால் தந்தையும் இந்த கூட்டணிக்கு ஒப்புக்கொண்டாராம்.. இந்த கூட்டணியை அதிமுகவில் கடுமையாக விமர்சித்து வருகிறார்களாம்.. ஆனால் இதற்கு சேலத்து கனி கட்சி சார்பில் ஒரு பதில் கூட தெரிவிக்கவில்லையாம்..
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் எல்லா கட்சியிலும் தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்களாம்.. ஆனால் சேலத்து கனி கட்சியில் தலைவர் பிரசாரத்தை துவங்காமல் உள்ளாராம்.. தமிழகத்தில் பாஜவிற்கு எதிராக அலைவீசும் நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்ததால் சேலத்து கனி கட்சிக்கும் அதே நிலைதான் இருக்கிறதாம்.. இந்நிலையில் பிரசாரத்தை துவங்காமல் இருக்கும் தலைவரால் வேட்பாளர்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.