Saturday, September 28, 2024
Home » மாம்பழமா மாம்பழம்!

மாம்பழமா மாம்பழம்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

கோடைகாலம் துவங்கிவிட்டாலே மாம்பழ சீசன் வந்திடும். பங்கனப்பள்ளி, ருமானியா, அல்போன்சா என பல வகை மாம்பழங்களை இந்த காலத்தில் நாம் சுவைக்கலாம். தித்திப்பாக இருக்கும் இந்த மாம்பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

* மாம்பழத்தில் மற்றவற்றை விட அதிகமான வைட்டமின் A சத்து அடங்கியுள்ளது. இச்சத்து ரத்தத்தை சுத்தம் செய்யவும் உடலுக்கு நல்ல வலுவை தரவும் நோய் தடுப்பாகவும் உதவுகிறது.

* மாம்பழத்தில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, பாஸ்பரஸ் முதலிய சத்துக்களோடு வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும் அடங்கி இருக்கின்றன.

* மாம்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இதை உண்பதால் உயர் ரத்த அழுத்தம் சீராகும். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.

* மாம்பழம் சாப்பிட நரம்பு தளர்ச்சியை போக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நல்ல கனிந்த மாம்பழத்தை சாப்பிட்டால் மாதவிடாய் சுழற்சி சீராகும். மாம்பழம் ஈறுகளுக்கு நன்மை பயக்கிறது. சிறுநீரகக்கற்களை கரைக்கக் கூடியது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

* மாம்பழம் சாப்பிட எலும்புகளை பலப்படுத்தி செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

*தோல் பளபளப்பிற்கும், முடி வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது.

* மாம்பழத்திலுள்ள பருப்பு எனப்படும் கொட்டையும் மருந்தாக பயன்படுகிறது. இதை சுட்டு சாப்பிட்டால் வேர்க்கடலை போல சுவையாக இருக்கும். கர்ப்பப்பைக் கோளாறுகளுக்கும், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் இதை மருந்தாக பயன்படுத்தலாம்.

* சதைப்பற்றுள்ள நல்ல மாம்பழத்தை வாங்கி காலை, மாலை, இரவு மூன்று ேவளைகளிலும் உணவு உண்ட பின்னர் பழத்தை சாப்பிட்டு பாலையும் தேனையும் கலந்து பருகி வந்தால் விரைவில் ரத்தம் உருவாகி உடலுக்கு நல்ல பலத்தையும் கொடுக்கும்.

* மலச்சிக்கல் இருந்தால் மாம்பழத்தை தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

* மாம்பழம் கார்போ ஹைட்ரேட் அதாவது மாவுச் சத்து அதிகமுள்ளது. இதை நீரிழிவுக்காரர்கள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமாகும். இதை மிகக் குறைந்த அளவே உண்ண வேண்டும்.

* மாந்தளிர்களை சிறிதளவு எடுத்து அதை நிழலில் காய வைத்து நன்றாக பொடித்து பாட்டிலில் வைத்துக் கொண்டு, ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிதளவு பொடியைப் போட்டு பருகினால் நீரிழிவு கட்டுப்படும்.

– ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.

You may also like

Leave a Comment

five × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi